Monday, September 5, 2011

Tirupathi Importance


Find some more details about Tirupathi…

அறிந்து கொள்வோம்.
திருப்பதி செல்கிறோம்திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கி மகிழ்கின்றோம்ஆனால் திருப்பதியில் நம்மில்சிலருக்குத் தெரியாத அதிசயங்கள்உண்மைகள்நடைமுறைகள் எவ்வளவோ உள்ளனஅவற்றிவ் சிலவற்றை தொகுத்துவழங்கப்பட்டுள்ளது.
பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில.........

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்என்ற அபூர்வ பாறைகள் உள்ளனஉலகத்திலேயே இந்தபாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம்ஏழுமலையானின் திருமேனியும்இந்த பாறைகளும்ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள்.. இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம்அரிப்பைக்கொடுக்கும் ஒருவகை அமிலம்இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும்ஆனால்,சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லைஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள்ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும்உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும்ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லைஎந்தகருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும்ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள்எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றனஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டிகாதணிகள்புருவங்கள்,நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறதுதிருமலை 3000 அடி உயரத்தில் உள்ளகுளிர்பிரதேசம்அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர்பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள்ஆனால்அபிஷேகம்முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்வியாழக்கிழமை அபிஷேகத்திற்குமுன்னதாகநகைகளைக் கழற்றும் போதுஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம்அதன் வழிபாடுஉண்டியல் வசூல்பூஜை முறைகள்சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசயநிகழ்வுகளாகஇருக்கின்றன..

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும்பொங்கல்தயிர்சாதம்,புளிச்சாதம்சித்ரான்னம்வடைமுறுக்கு,ஜிலேபிஅதி ரசம்போளிஅப்பம்மெளகாரம்லட்டுபாயசம்தோசைரவாகேசரிபாதாம்கேசரிமுந்திரிப்பருப்பு கேசரி போன்றவைதினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள்இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில்கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாதுவைரம்வைடூரியம்தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச்செல்லாதுஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும்தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அதுமிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும்இந்த ஆடையை கடையில் வாங்கமுடியாதுதிருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்றுமட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள்இது மேல் சாத்து வஸ்திரம்பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள்காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்குசமர்ப்பிக்கப்படும்பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூநேபாளத்திலிருந்து கஸ்தூரிசைனாவிலிருந்து புனுகுபாரிஸ் நகரத்திலிருந்துவாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டுதங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில்பால் அபிஷேகம் செய்யப்படும்பிறகு கஸ்தூரி சாத்திபுனுகு தடவப்படும்காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம்நடைபெறுகிறதுஅபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பிவைக்கப்படுகின்றனஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம்அகில்சந்தனம்அம்பர்தக்கோலம்இலவங்கம்குங்குமம்தமாலம்நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடிஇவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லைசாத்துவதற்குநேரமும் இல்லைஅதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம்விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடைஇதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவைசூரிய கடாரி 5 கிலோஎடைபாதக்கவசம் 375 கிலோகோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாதுஇதன் மதிப்பு ரூ.100கோடி.

12.. மாமன்னர்களான இராசேந்திர சோழர்கிருஷ்ண தேவராயர்அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும்,அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும்செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர்சோழ அரசியும் இங்கு வந்துகாணிக்கை சமர்பித்து இருக்கிறார்..

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவேஅபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம்கி.பி..966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டதுஇந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசிகாடவன் பெருந்தேவி நகைகளைத்தந்துபூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார்முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்துகாணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறதுமார்கழிமாத அர்சனைக்கும்உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது.. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதிநெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறதுதாளப்பாக்கம் அன்னமய்யாஏழுமலையானை பரப்பிரம்மமாகவும்,சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும்சக்தி ஸ்வரூபமாகவும் பாடிஅந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார்திருப்புகழ்பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார்அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள்சங்கீதமும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர்மந்திர சாஸ்திரம் தெரிந்தவர்நூற்றுக்கணக்கானதெய்வங்கள் மீது பாடியுள்ளார்ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்..

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீகசாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும்ஆனால் ஏழுமலையான்திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாதுஅவர் நிராயுதபாணிஅதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால்,வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்ததுஅப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்தலெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார்அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார்குணமடைந்ததும் ஓர்இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோகர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லைஆங்கிலப்பாதிரிகள் மலையில்ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள்ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை.திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள்பூஜைகள் சரிவரநடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

No comments: